<?xml version="1.0" encoding="UTF-8"?><!-- generator="WordPress/2.9.1" -->
<rss version="0.92">
<channel>
	<title></title>
	<link>http://ilakkiyam.tamilantelevision.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 31 May 2010 10:29:43 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	
	<item>
		<title>கர்த்தரே! மீண்டும் உயிர்த்தெழுங்கள்&#8230; !!!!</title>
		<description><![CDATA[அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை  தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!
இன்று&#8230; நாங்கள் ..
பேச முடிந்தும்  &#8211; எங்கள் நாட்டின்
அவலங்களை எதிர்த்து
பேசும் ஊமையாய் இருக்கிறோம்.
பார்வை இருந்தும் &#8211; நடக்கும்
அநியாயங்களை தட்டி கேட்காமல்
கண்ணிருந்தும்  காணதது போல் இருக்கிறோம்.
கேட்க முடிந்தும் &#8211; தினம் விழும்
உதவிக் குரல்களை உதாசீனப் படுத்தி
கேளாதது போல நடிக்கிறோம்.
மொத்தத்தில் &#8211; குடிமக்களாய்
வாழாமல்  வெறும் நாட்கள் கடத்தும்
மாக்களாய் தான் இருக்கிறோம்.
ஆகவே  கர்த்தரே!!!
மீண்டும் உயிர்த்தெழுங்கள்&#8230;
ஆமென்.


]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=45</link>
			</item>
	<item>
		<title>முள்ளிவாய்க்காலில் முடிந்து போகும் முடிவல்ல ! &#8211; வித்யாசாகர்</title>
		<description><![CDATA[காற்றின் அசைவுகளில்
ஏக்கமாகப் படிந்த கறையது
ஈழ விடுதலை;
ஈழவரலாற்றில்
ரத்தத்தால் தொய்ந்த பகுதி
முள்ளிவாய்க்கால்!
அழகிய ஆனந்தபுரத்தை
சுடுகாடாக்கி -
சமாதியின்றி பல போராளிகளை
செய்திக்கு – மரணப் படையலிட்ட பெருந் துயரம்
முள்ளிவாய்க்கால்!
சதைகிழிந்து
உறுப்புகள் சிதறி
உடல் துண்டிக்கப் பட்டு
அரை உயிரில் மிச்சப் பட்ட இனத்தையும்
ஈ மொய்த்து நோய் தின்ற கொடுமை
முல்லிவைக்கால் கொடுமை;
போர் கடந்து
போர் முறை கடந்து
கர்ப்ப வயிறு கிழித்து
முதியோர் கால்கள் நறுக்கி
அப்பாவிப் மக்களையும்
போராளிகளையும்
எம் தலைவர்களையும்
சிங்களனின் கோழைத் தனத்தால்
சதியில் வீசிய நச்சுக் குண்டினால்
கொன்று குவிக்கப் பட்ட வன்முறை கொடுமை
வேறெங்கு நடந்திருக்குமோ தொழர்களே;
கூடின்றி – பறந்து பறந்தே
கால்கள் ஒடிந்தும் -
இறக்கம் சுரக்கா இதயமென்ன
இரும்பாலானதோ [...]]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=42</link>
			</item>
	<item>
		<title>வறுமை</title>
		<description><![CDATA[

காலங்கள் மாறுகிறது
கடமைகளும் மாறுகிறது. – ஆனால்
வறுமை மட்டும்  மாறவில்லை.
சட்டங்கள் மாற்றமாகிறது
திட்டங்கள்  வகுக்கப்படுகிறது
வறுமை மட்டும்  தீர்க்கப்படவில்லை!
வானமழுதால்
வெள்ளம் புரளும்  அந்த
புறம்போக்கு நிலம்.
சட்டிச் சோற்றுக்காய்
வற்றிய வயிறுகள்
வாழுகின்ற இல்லம்.
கந்தையும் கிழிசலும்
அவர்களது  உடை.
ஒட்டிய வயிற்றுடன்…..
பார்க்க நெஞ்சு குமுறுகிறது.
அவர்கள் உடம்புபடும்பாட்டை!
பாவங்கள்  நீங்க
புண்ணீயம் தேடி செல்கிறான் காசி -ஆனால்
ஏழைகளுக்கு  உதவினால் பாவம் தீராதா..
நீ யோசி!!!
- வெ.யுவராஜ்








]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=33</link>
			</item>
	<item>
		<title>காதல்</title>
		<description><![CDATA[அன்பே உன்னை வர்ணிக்க கம்பன் கவிதை வரிகளை தேடினேன் கிடைக்கவில்லை.
கண்ணதாசனிடம் சென்றேன் அவரும் மறுத்துவிட்டார்  !
பின்னர்தான் தெறிந்தது  அவர்களே
உன்னை வர்ணிக்க வார்த்தைகளை அகராதியில் புரட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்று.
]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=30</link>
			</item>
	<item>
		<title>வைரமுத்து கவிதைகள்</title>
		<description><![CDATA[1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து
மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி
2. காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் &#8211; இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.
3. சமய காலம்
வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
4. சிற்றிலக்கியக் காலம்
தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் &#8211; [...]]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=23</link>
			</item>
	<item>
		<title>இலக்கியம்</title>
		<description><![CDATA[களத்தில்
நிற்கிறேன்&#8230;
என்
இலக்கியத்தில்
அழகில்லை
என்கிறாய்.
தோரணம்
கட்டும்
தொழிலோ
எனக்கு?
வாளில்
அழகு தேடாதே
கூர்மை பார்..!
- காசி ஆனந்தன்



]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=20</link>
			</item>
	<item>
		<title>மனிதன்</title>
		<description><![CDATA[ 
இவன்
பசுவின் பாலைக்
கறந்தால்
&#8216;பசு பால் தரும்&#8217;
என்கிறான்.
காகம்
இவன் வடையை
எடுத்தால்
&#8216;காகம்
வடையைத் திருடிற்று&#8217;
என்கிறான்.
இப்படியாக
மனிதன்&#8230;
- காசி ஆனந்தன்



]]></description>
		<link>http://ilakkiyam.tamilantelevision.com/?p=18</link>
			</item>
</channel>
</rss>
