கர்த்தரே! மீண்டும் உயிர்த்தெழுங்கள்… !!!!

31 05 2010
அன்று..
ஊமையை பேச வைத்தீர்!
குருடருக்கு பார்வை தந்தீர்!
செவிடரை கேட்க வைத்தீர்!
இறந்தவரை உயிர்ப்பித்தீர்!
இன்று… நாங்கள் ..
பேச முடிந்தும் – எங்கள் நாட்டின்
அவலங்களை எதிர்த்து
பேசும் ஊமையாய் இருக்கிறோம்.
பார்வை இருந்தும் – நடக்கும்
அநியாயங்களை தட்டி கேட்காமல்
கண்ணிருந்தும் காணதது போல் இருக்கிறோம்.
கேட்க முடிந்தும் – தினம் விழும்
உதவிக் குரல்களை உதாசீனப் படுத்தி
கேளாதது போல நடிக்கிறோம்.
மொத்தத்தில் – குடிமக்களாய்
வாழாமல் வெறும் நாட்கள் கடத்தும்
மாக்களாய் தான் இருக்கிறோம்.
ஆகவே கர்த்தரே!!!
மீண்டும் உயிர்த்தெழுங்கள்…
ஆமென்.

Actions

Informations

Leave a comment

You can use these tags : <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>